
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் யமுனை நதி அதன் அபாய அளவை நெருங்கி வெள்ள நீர் பாய்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி யமுனையில் அபாய அளவான 205.33 மீட்டருக்கு மிக நெருக்கமாக 204.5 மீட்டர் என்ற அளவில் வெள்ளம் பாய்ந்தது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனையின் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் நவுகான் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த பாதிப்பில் அங்குள்ள வீடு ஒன்று மண்ணுக்குள் புதைந்தது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள சில வீடுகளை சேற்று நீர் சூழ்ந்தது.