
புதுடெல்லி: பாஜக மீது வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கடந்த மாதம் வைத்திருந்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்நிலையில், பாஜகவின் பின்னணியில் தேர்தல் ஆணையம் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில தேர்தல்களில் ‘வாக்கு திருட்டு’ மோசடி நடந்துள்ளதாக கடந்த மாதம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். அதற்கு அவரிடம் ஆதாரமும், உறுதிமொழி பத்திரமும் கேட்டிருந்தது தேர்தல் ஆணையம். ‘வாக்கு திருட்டு’ விவகாரம், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி உள்ளிட்டவற்றை முன்வைத்து பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார்.