
“எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி, ஜெயலலிதாவால் கட்டிக் காப்பாற்றப்பட்ட கட்சி, இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா?” என்று புதிதாக உருவான ஒரு கட்சியின் தலைவர் கேள்வி எழுப்புகிறார். ஆம், தவெக தலைவர் விஜய்தான் அவர். விஜய்க்கு பதிலடி கொடுக்கும் இபிஎஸ் ஆதரவாளர்களோ, “எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அனுபவ வயதுதான் கேள்வி எழுப்பிய அந்தத் தலைவரின் வயது” என்பதோடு நிறுத்திக் கொள்கின்றனர்.
இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பிடிக்காவிட்டாலும், கட்சி மீதான பிடி சற்றும் தளர்ந்துவிடாமல் தக்கவைத்துக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமியை கட்சிக்குள்ளேயே சிலரும், எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கின்ற வேளையில், அவர் குறைத்து மதிப்பிடப்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. அது பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.