• September 7, 2025
  • NewsEditor
  • 0

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புள்ளிமான் வேட்டை வழக்கில், திமுகவின் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான டி.எம்.எஸ். முகேஷை வனத்துறையினர், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் இணைந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் முகேஷ், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வேட்டைக்காரர்களை வரவழைத்து, ஆலங்குளம் வனச்சரகத்திற்குட்பட்ட உத்துமலை மேற்குப் பகுதியில் புள்ளிமான்களை வேட்டையாடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ராமநாதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மான் வேட்டையில் ஈடுபட்டவர்கள்

இந்த வழக்கில் முகேஷ் கைது செய்யப்பட்டால் மட்டுமே, வேட்டையாடப்பட்ட மான்களின் உண்மையான எண்ணிக்கை, சமைக்கப்பட்டது மற்றும் இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

ஆலங்குளம் வனச்சரக அலுவலர் டி.முனிரத்தினம் தலைமையிலான வனத்துறையினர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சி.பொன் ஆனந்த் (46), டி.ராஜலிங்கம் (40) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இ.ரஞ்சித் சிங் ராஜா (40) ஆகிய மூன்று பேரை கைது செய்து, இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.

தேடப்படும் முகேஷ்

இந்த மூவரும், முகேஷ்தான் தங்களை மான் வேட்டைக்காக உத்துமலைக்கு அழைத்து வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், முகேஷ் தொடர்ச்சியாக வேட்டையில் ஈடுபடுபவராக இருக்கலாம் என்றும், சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான துப்பாக்கிகளுடன் காணப்படும் அவரது படங்களில் உள்ள துப்பாக்கிகள் இந்த வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *