• September 7, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரை அடுத்த சூரஜ்பூர் கிராமத்தில் ஒரு குடிசைவீட்டில் குரங்குகள் புகுந்து இரண்டு மாத ஆண் குழந்தையை தூக்கிச் சென்று, நீர் நிரம்பியப் பீப்பாயில் போட்டுள்ளன.

குரங்குகளின் சத்தம் கேட்டு குடிசைக்கு ஓடிச்சென்ற பெற் றோர் அங்கு குழந்தையைக் காணாததால் சுற்றியுள்ள பகுதி முழுவதும் தேடி உள்ளனர். இறுதியில் அக்குழந்தை தண்ணீர் நிரப்பப்பட்ட பீப்பாயில் மூழ்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை அரு கிலுள்ள சீதாபூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது அக்குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள் ளது. குறிப்பாக ஒரு வருடத்துக்கு முன்பு மணமான தம்பதியருக்கு பிறந்த முதல் குழந்தை இது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *