• September 7, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்தியாவால் தேடப்படும் நீரவ் மோடி, விஜய் மல்லையாவை ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வரும் நிலையில், டெல்லியில் உள்ள திஹார் சிறையை இங்கிலாந்து குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

இந்திய வங்கிகளில் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் விஜய் மல்லையா மீது புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதுபோல, வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,800 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனிடையே லண்டன் தப்பிச் சென்ற அவர் கடந்த 2019-ம் ஆண்டு அங்கு கைது செய்யப்பட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *