
சென்னை: பணமதிப்பிழப்பு காலத்தில் காஞ்சிபுரத்தில் சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வி.கே.சசிகலா வாங்கியிருந்ததாக சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் லிமிட்டெட் என்ற சர்க்கரை ஆலை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.120 கோடி ரூபாயும், மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது. இந்த கடன்களுக்கு அடமானமாக வைக்கப்பட்டிருந்த ஆலை இயந்திரங்களை, கடன் கொடுத்த வங்கிகளுக்கு தெரியாமல் விற்று, தனியார் சர்க்கரை ஆலை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக நிதி நிறுவனம் ஒன்று சிபிஐயில் புகார் அளித்தது.