
சென்னை: தமிழகத்தில் கட்சி தொடங்கி 53 ஆண்டுகளை கடந்த அதிமுக, 31 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்துள்ளது. அடுத்தடுத்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சியும் அதிமுக தான். கட்சியை கைப்பற்றிய பழனிசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றத்தில் தொடர் வெற்றியை பெற்றாலும், பொதுத் தேர்தல்களில் தோல்வி முகமே மிஞ்சியது. 2024 தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை.
மேலும் அன்வர் ராஜா, வா.மைத்ரேயன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். கட்சி பிரிந்து கிடப்பதே அதிமுகவின் தோல்விக்கு காரணம். கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.