• September 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​ட​ணிக் கட்​சிகளான காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​படும் இடங்​கள் குறித்து திமுக மேலிடம் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது.

தற்​போதைய நில​வரப்​படி 2026 சட்​டப்​பே​வைத் தேர்​தலில் அதி​முக, திமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப்​போட்டி ஏற்​படும் சூழல் நில​வு​கிறது. ஆளும் கட்​சி​யான திமுக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ், மதி​முக, விசிக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள், கொமதேக, மக்​கள் நீதி மய்​யம், இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக், தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி, மனித நேய மக்​கள் கட்​சி, மக்​கள் விடு​தலைக் கட்​சி, ஆதித் தமிழர் பேரவை உள்​ளிட்ட கட்​சிகள் இடம்​பெற்​றுள்​ளன. இதுத​விர தேமு​திக உட்பட சில கட்​சிகளு​ட​னும் திமுக பேசி வரு​கிறது. அதே​நேரம், கூட்​டணி ஆட்​சிக்​கான பேச்​சுகள் வலுப்​ப​தால் தனி பெரும்​பான்​மை​யுடன் ஆட்​சியை தக்க வைப்​ப​தற்கு திமுக விரும்​பு​கிறது. அதற்​கேற்ப கூட்​டணி கட்​சிகளுக்​கான இடங்​கள் மற்​றும் தொகு​தி​களை ஒதுக்​கீடு செய்​வதற்கு அதன் தலைமை திட்​ட​மிட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *