
திருநெல்வேலி: அதிமுக, பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பாஜகதான் முக்கிய காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வாக்கு என்பது ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை உரிமை. அந்த வாக்கு அதிகாரத்தை தேர்தல் ஆணையமும், பாஜகவும் சேர்ந்து பறித்து வருகின்றன. இதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் நெல்லையில் செப். 7-ல் (இன்று) விழிப்புணர்வு மாநாடு நடத்துகிறோம். இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய்குமார், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.