
சென்னை: இந்த ஆண்டின் அரிய முழு சந்திர கிரகணம் இன்று (செப்.7) நடைபெற உள்ளது. இதை வெறும்கண்களால் காண முடியும்.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.