• September 6, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: கப்​பல் கட்​டும் துறை​யில் 2030-ம் ஆண்​டில் உலகில் சிறந்த 10 நாடு​களுக்​குள் இந்​தியா இடம் பிடிக்​கும் என்று மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் நீர்​வழித் துறை அமைச்​சர் சர்​பானந்தா சோனோ​வால் கூறி​னார். தூத்​துக்​குடி வஉசி துறை​முகத்​தில் மொத்​தம் ரூ.303 கோடி​யில் பசுமை ஹைட்​ரஜன் முன்​னோடி ஆலை தொடக்க விழா மற்​றும் பல்​வேறு திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது.

துறை​முக ஆணை​யத் தலை​வர் சுசாந்த குமார் புரோஹித் தலைமை வகித்​தார். தமிழக அமைச்​சர் பி.கீ​தாஜீவன், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் முன்​னிலை வகித்​தனர். மத்​திய அமைச்​சர் சர்​பானந்தா சோனோ​வால் முடிவுற்ற திட்​டப் பணி​களை தொடங்​கி​வைத்​தும், புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும் பேசி​னார். விழா​வில், மத்​திய துறை​முகங்​கள் துறைச் செயலர் டி.கே.​ராமச்​சந்​திரன், சிறப்​புச் செயலர் ராஜேஷ் குமார் சின்​கா உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *