
ஈரோடு: “பழனிசாமிக்கு அதிமுக சொந்தமில்லை என்பதை நீதிமன்றமும், மக்கள் மன்றமும் சொல்லவுள்ளது” என்று செங்கோட்டையனை சந்தித்த பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த பெங்களூரு புகழேந்தி இன்று நேரில் சந்தித்தார். தொடர்ந்து இருவரும் நீண்ட நேரம் உரையாடினர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பெங்களூரு புகழேந்தி கூறியது: “கட்சியை நாசம் செய்யும் பணியில் இபிஎஸ் ஈடுபட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையை மக்களும், தொண்டர்களும் ஏற்கவில்லை. கட்சியை ஒருங்கிணைக்காவிட்டால், அதிமுக 4-ம் இடத்துக்குச் சென்று விடும். நாம் தமிழர் கட்சியோடுதான் போட்டி போட வேண்டும்.