
நத்தம்: “ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களைப் பாதுகாக்க அதிமுக என்றும் துணை நிற்கும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய ஊர்களில் மேற்கொண்டார். நத்தத்தில் அவர் பேசியது: “விவசாயிகள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதி நத்தம். விவசாயத்தை நம்பி வாழுகின்ற மக்களுக்கு அதிமுக ஆட்சியில் பல நன்மைகள் கிடைத்துள்ளது. இரண்டு முறை பயிர்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.