• September 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், லண்டன் நகரில் அமைந்துள்ள கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “லண்டன் கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி, எக்காலத்துக்குமான தமிழ் பண்பாட்டின், அறிவுக்கருவூலமாகத் திகழும் திருக்குறளை போற்றினேன். அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுடன் திமுகவின் ஆட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் ஆற்றல் குறித்து உரையாடி, மனதுக்கு நெருக்கமான கருத்துகளை பகிர்ந்து கொண்டேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *