
சென்னை: தமிழகத்தில் 46 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் இன்று கோப்பைகளை வழங்கவுள்ளார். ஆண்டுதோறும் செப். 6-ம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
1859-ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப். 6-ம் தேதியை அடிப்படையாக வைத்து காவலர் நாள் கொண்டாடப்படும். அன்றைய தினம் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் கோப்பை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.