
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தை இனி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாதமும் முதல் வார சனி, ஞாயிறு மற்றும் மாதத்தின் மூன்றாம் வார சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தை நடைபெற்று வந்தது.