
திருச்சி: தவெக தலைவர் விஜய் வருகிற செப்.13-ம் திருச்சியில் சட்டப்பேரவை தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கவிருப்பது உறுதியான நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ள இடத்தில் பிரச்சாரம் செய்ய திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். தொடர்ந்து கோவை, மதுரையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தை மாநாடு போல நடத்தி காட்டினார். திருச்சியில் மாநாடு ஏற்பாடு செய்யாதது அவரது கட்சியினர் இடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.