
திருச்சி: பாஜக வளர்வது மற்ற கட்சிகளின் வீழ்ச்சியால் அல்ல என பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். வ.உ.சி. பிறந்த நாளையொட்டி, திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: அமெரிக்க அதிபர் உலகில் அதிக வரி விதித்திருப்பது இந்தியாவுக்குத்தான்.
வரி தீவிரவாதத்தை கையில் எடுத்ததால் அமெரிக்க அதிபரின் மரியாதை குறைந்திருக்கிறது. அதிக வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்து பிரதமர் மோடி 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆன்லைன் மூலமாக 160 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை நாம் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்கிறோம்.