
மும்பை: ரூ.60 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகர் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. மகாராஷ்டிர மாநிலத்தில் குடியேறி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
அவர், தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் மகாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும், தன்னிடம் பெற்ற ரூ.60 கோடியை தராமல் மோசடி செய்ததாக மும்பை போலீஸில் தொழிலதிபர் தீபக் கோத்தாரி(60) என்பவர் புகாரளித்தார்.