
திருச்சி/ தஞ்சாவூர்: சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு மதிமுக சார்பில் நேற்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை.வைகோமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஒரேநேரத்தில் நடைபெறும்போது வேலைப்பளு இருக்கத்தான் செய்கிறது.