• September 6, 2025
  • NewsEditor
  • 0

பரேலி: கணவர் சமோசா வாங்கி வராத​தால் ஏற்​பட்ட வாய்த்​தக​ராறு அடி தடி​யில் முடிவடைந்​தது. இது தொடர்​பாக மனைவி மற்றும் அவரது குடும்​பத்​தார் மீது உத்தர பிரதேச போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர். உத்தர பிரதேசம் பிலிபித் பகு​தி​யில் உள்ள அனந்​த்பூரைச் சேர்ந்​தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்​கீ​தா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்​படி சங்​கீதா கூறி​யுள்​ளார்.

ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன் வீடு திரும்​பி​யுள்​ளார். சமோசா எங்கே என மனைவி கேட்​ட​போது, வாங்க மறந்து விட்​டேன் என சிவம் குமார் கூறி​யுள்​ளார். இதனால் இரு​வர் இடையே வாய்த் தகராறு ஏற்​பட்​டது. மறு​நாள் தனது குடும்​பத்​தினரை வரவழைத்த சங்​கீ​தா, சமோசா விஷ​யத்தை கூறி, தான் சொல்​வதை கணவர் கேட்​ப​தில்லை என புகார் கூறி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *