• September 6, 2025
  • NewsEditor
  • 0

2026-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால், அவரோடு முரண்டு பிடித்து நிற்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜியோ, “விருதுநகரை கேட்டு வாங்குங்கள்; உங்களை நான் ஜெயிக்க வைக்கிறேன்” என்று பாஜக-வில் இருக்கும் நடிகர் சரத்குமாரை கொம்பு சீவுவதாகச் சொல்கிறார்கள்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதி​முக எல்​லைக்​குள் உள்ள விருதுநகர் தொகு​தி​யில் மாஃபா பாண்​டிய​ராஜனும், ராஜ​பாளை​யம் தொகு​தி​யில் பாஜக சார்​பில், முன்​னாள் அதி​முக எம்​எல்​ஏ-​வான கோபால்​சாமி​யும் போட்​டி​யிட ஆயத்​த​மாகி வரு​கி​றார்​கள். இவர்​கள் இரு​வரை​யுமே தனக்கு ஆகாது என்​ப​தால் ஒரே கல்​லில் ரெண்டு மாங்​காய் அடிக்க ஆயத்​த​மாகி வரு​கி​றார் ராஜேந்​திர பாலாஜி.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட அதி​முக மூத்த நிர்​வாகி​கள் சிலர், “மாஃபா பாண்​டிய​ராஜன் சென்​னையை விட்​டு​விட்டு மீண்​டும் விருதுநகர் அரசி​யலுக்கு திரும்​பியது ராஜேந்​திர பாலாஜிக்கு பிடிக்​கவே இல்​லை. அதனால் அவருக்கு எதி​ராக பொது​வெளி​யிலேயே வார்த்தைகளில் மறை​முக​மாக வெடித்​தார் பாலாஜி. இது தொடர்​பாக கட்​சித் தலைமை அவரை அழைத்து கண்​டித்​ததும், ‘நான் பாண்​டிய​ராஜனைக் குறிப்​பிட்​டுப் பேச​வில்​லை’ என மறுத்​தார். பாலாஜி இப்​படி மிரட்​டல் தொனி​யில் பேசி​யது பாண்​டிய​ராஜனுக்கு தொழில் ரீதி​யாக​வும் சில சங்கடங்களை ஏற்​படுத்​தி​யது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *