
புதுடெல்லி: மகாராஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிடம் டெஸ்லா “ஒய்” மாடலின் முதல் கார் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்த காரை மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஷோரூமில் இருந்து பெற்றுக்கொண்டார்.
கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் அதன் முதல் ஷோரூமை திறந்தது. அப்போது இந்த “ஒய்” மாடல் காரை அமைச்சர் பிரதாப், தனது பேரனுக்கு பரிசாக கொடுப்பதற்காக முன்பதிவு செய்திருந்தார். பசுமை வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை பேரனிடம் ஏற்படுத்துவதற்காக அவர் இந்த காரை பரிசளிப்பதற்கு முடிவு செய்திருந்தார்.