
தேனி / திருநெல்வேலி / தஞ்சாவூர் / திண்டுக்கல்: அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக பிரிந்து கிடப்பதால்தான் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலை மாற வேண்டும் எனில், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். அதிமுக தொண்டர்களை யாராலும் வெளியேற்ற முடியாது.