• September 6, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: மனித வெடிகுண்​டு​களு​டன் 34 வாக​னங்​கள் தயார் நிலை​யில் நகருக்​குள் நுழைந்​துள்​ள​தாக​வும், மும்​பையைத் தாக்கி அழிக்​கப் போவ​தாக​வும் மிரட்​டல்​கள் வந்​துள்​ளன. மகா​ராஷ்டிர மாநிலம் மும்பை மாநகர போலீஸ் உதவி மையத்​துக்கு நேற்று காலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்​துள்​ளது. அதில் 400 கிலோ ஆர்​டிஎக்ஸ் வெடிமருந்​துகளை நிரப்​பிய 34 வாக​னங்​கள் மும்பை நகருக்​குள் நுழைந்து இருப்​ப​தாக​வும், அது வெடித்​தால் மொத்த மும்பை நகர​மும் அழிந்து விடும் என்று மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.

மேலும், மும்பை போக்​கு​வரத்து போலீ​ஸாரின் வாட்​ஸ்​அப் நம்​பருக்​கும் இந்த அச்​சுறுத்​தல் வந்​துள்​ளது. மேலும், அந்த மிரட்​டல் செய்​தி​யில், லஷ்கர்​-இ-ஜிஹாதி அமைப்​பைச் சேர்ந்த 14 பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் இந்​தி​யா​வில் நுழைந்து இந்த தாக்​குதலை நிகழ்த்த இருப்​ப​தாக​வும் தெரி​வித்​துள்​ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்​சி​யடைந்​துள்ள மும்பை போலீ​ஸார், மாநிலம் முழு​வதும் பாது​காப்பை பலப்​படுத்​தி​யுள்​ளனர். மேலும், இந்த மிரட்​டல் குறித்து தீவிர விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *