
மாமல்லபுரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய 16 கேள்விகளுக்கு எந்த பதிலையும் தெரிவிக்கப்போவதில்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக 16 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பிலிருந்து, அன்புமணியிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கான காலக்கெடு, கடந்த ஆக. 31-ம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், 10-ம் தேதி வரை பதில் அளிக்க அவகாசம் வழங்குவதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார்.