
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பாஜக கேட்டு வரும் நிலையில், நாற்பது தொகுதிகளை கொடுக்கிறோம், அதில் இருபதை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என அதிமுக கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் சுற்றுப்பயணம், மக்கள் சந்திப்பு என தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.