
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, செங்கோட்டையன் குறித்த பேச்சை தவிர்த்தார். முன்னதாக, பழனிசாமி வாகனத்தை அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக இன்று தேனி மாவட்டம் கம்பம், போடி, தேனியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.