• September 5, 2025
  • NewsEditor
  • 0

நித்யானந்தா என்றைக்கு அடியெடுத்து வைத்தாரோ அன்று முதலே மதுரை தெற்காவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்துக்குள் சர்ச்சைகள் சம்மணம் போட்டு உட்கார ஆரம்பித்துவிட்டன. அந்த விதத்​தில் இப்​போது, மடத்​தில் தம்​பி​ரான் பட்​டமேற்ற விஸ்​வலிங்க தம்​பி​ரான் மாவட்ட ஆட்​சி​யரிடம் மதுரை ஆதீனத்​துக்கு எதி​ராக பிராது கொடுத்த விவ​காரம் பெரும் சர்ச்​சை​யாகி வரு​கிறது.

மதுரை ஆதீன மடத்​திற்கு இளைய ஆதீன​மாக இன்​னொரு​வ​ருக்கு பட்​டம் சூட்​டு​வதை தடுக்க வேண்​டும் எனவும், தகு​தி​யான தன்​னையே இளைய ஆதீன​மாக நியமிக்க வேண்​டும் எனவும் தனது புகாரில் தெரி​வித்​துள்ள விஸ்​வலிங்க தம்​பி​ரான், இந்​தக் கோரிக்​கையை வலி​யுறுத்​தி, முக்தி அடைந்த ஆதீனம் அருணகிரி​நாதரின் சமா​தி​யில் அமர்ந்து தர்ணா போராட்​டத்​தி​லும் ஈடு​பட்டு கவனம் ஈர்த்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *