
ஆண்டிபட்டி: அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டு 5 மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பும், கனவும் நிறைவேறி இருக்கும் என்று ஆண்டிபட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நேற்று இரவு (செப்.4) பிரச்சாரம் செய்து அவர் பேசியதாவது: ”இங்கு கூடியுள்ள தொண்டர்கள் கூட்டம் வரும் தேர்தலில் அதிமுக வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது. ஆண்டிபட்டி தொகுதிக்கு என்று தனி வரலாறு இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அரசியல் வரலாற்றிலேயே இரண்டு முதல்வர்களை தந்த தொகுதி இது.