
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்துவதாகவும் இதில் சிலர் உயிரிழப்பதாகவும் புகார் எழுந்தது.
இத்தகைய மனித உரிமை மீறல் செயலை தடுக்க, காவல் நிலைய வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.