• September 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பூந்​தமல்லி – பரந்​தூர் வரையி​லான மெட்ரோ ரயில் நீட்​டிப்பு திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக பூந்​தமல்லி – சுங்குவார்சத்திரம் வரை நிலம் கையகப்​படுத்​தல் உள்​ளிட்ட ஆரம்​பக் கட்ட பணி​களை மேற்​கொள்ள ரூ.2,125.84 கோடிக்கு நிர்​வாக ஒப்​புதல் வழங்​கி, தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

சென்​னை​யில் தற்​போது 2 வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இதற்கு பொது​மக்​கள் மத்​தி​யில் கிடைத்த நல்ல வரவேற்​பைத் தொடர்ந்​து, இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் மேற்​கொள்ள முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி, 116.1 கி.மீ தொலை​வில் 3 வழித்​தடங்​களில் மெட்ரோ ரயில் திட்​டப்​பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்த 3 வழித்​தடங்​களில், இரு வழித்​தடங்​களை நீட்​டிக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *