
அமராவதி: யூனிவர்ஸல் ஹெல்த் பாலிசிக்கு ஆந்திர அரசு நேற்று அனுமதி வழங்கியது. இதனால் இனி ஆந்திர மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறலாம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக, ஆந்திராவில் யூனிவர்ஸல் ஹெல்த் பாலிசிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் மனைவியான புவனேஸ்வரி நடத்தும் என்டிஆர் அறக்கட்டளை இணைந்து இத்திட்டத்தில் பணியாற்றும். இதன்படி, இனி ஆந்திராவில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்பத்தாருக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும்.