• September 5, 2025
  • NewsEditor
  • 0

அமராவதி: யூனிவர்​ஸல் ஹெல்த் பாலிசிக்கு ஆந்​திர அரசு நேற்று அனு​மதி வழங்​கியது. இதனால் இனி ஆந்​திர மாநிலத்​தில் வறுமை கோட்​டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்​பத்​தினர் ஆண்​டுக்கு ரூ.25 லட்​சம் வரை இலவச மருத்​துவ காப்​பீடு பெறலாம். ஆந்திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் அமைச்​சரவை கூட்​டம் அமராவ​தி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பல முக்​கிய தீர்​மானங்​கள் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டன. அதில் குறிப்​பாக, ஆந்​தி​ரா​வில் யூனிவர்​ஸல் ஹெல்த் பாலிசிக்கு அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது.

அதன்​படி, மத்​திய அரசின் ஆயுஷ்​மான் பாரத் மற்​றும் சந்​திர​பாபு நாயுடு​வின் மனை​வி​யான புவனேஸ்​வரி நடத்​தும் என்​டிஆர் அறக்​கட்​டளை இணைந்து இத்​திட்​டத்​தில் பணி​யாற்​றும். இதன்​படி, இனி ஆந்​தி​ரா​வில் வறுமை கோட்​டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்​பத்​தா​ருக்கு ஆண்​டுக்கு ரூ.25 லட்​சம் வரை மருத்​துவ காப்​பீடு கிடைக்​கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *