
சென்னை: தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த நகையை நேர்மையுடன் போலீஸாரிடம் ஒப்படைத்த பணியாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். காசிமேட்டைச் சேர்ந்தவர் கிளாரா (39). சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் (3-ம் தேதி) காலை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டப வளாகத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. அதன் பிறகு மாலை 5 மணியளவில் அந்த பகுதியில் தூய்மைப் பணி நடைபெற்றது.