• September 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறுகை​யில், “கிட்​டத்​தட்ட 10 ஆண்டு கால​மாக ஜிஎஸ்​டியை எளிமைப்​படுத்த வேண்டும் என்று காங்​கிரஸ் கோரி வரு​கிறது. மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி என்​பதை ஒரு நாடு 9 வரி​கள் என மாற்​றியது. அதில், 0%, 5%, 12%, 18%, 28% மற்​றும் 0.25%, 1.5%, 3% மற்​றும் 6% என்ற சிறப்பு வரி விகிதங்​களும் அடங்​கும். 2019 மற்​றும் 2024 தேர்​தல் அறிக்​கை​யில் எளிமை​யான ஜிஎஸ்டி 2.0-ஐ காங்​கிரஸ் கோரி​யிருந்​தது.

மொத்த ஜிஎஸ்​டி​யில் மூன்​றில் இரண்டு பங்கு அதாவது 64% வசூல் ஏழைகள் மற்​றும் நடுத்தர வர்க்​கத்​தினரின் பைகளில் இருந்து வரு​கிறது. ஆனால், கோடீஸ்​வரர்​களிட​மிருந்து 3% வரி மட்​டுமே வசூலிக்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *