
சென்னை: தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் செப்.8-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு, வடமேற்காக நகர்ந்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, வடக்கு சட்டீஸ்கர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவியது.