• September 5, 2025
  • NewsEditor
  • 0

இம்பால்: மைதே​யி, குகி குழுக்​கள் மற்​றும் மத்​திய அரசு இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உள்​ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்​சாலையை திறக்க குகி நிர்​வாகக் குழு ஒப்​புக் கொண்​டுள்​ளது. அந்த மாநிலத்​தில் விரை​வில் அமைதி திரும்​பும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்​பூரில் மைதே​யி, குகி சமு​தா​யத்​தினர் இடையே மோதல் ஏற்​பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து 258 பேர் உயி​ரிழந்​தனர்.

1,108 பேர் காயமடைந்​தனர். 400 தேவால​யங்​கள், 132 இந்து கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. சுமார் 60,000-க்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர். கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக மணிப்​பூரில் வன்​முறை நீடித்து வரு​கிறது. வரும் 13-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி மணிப்​பூர் மாநிலத்​துக்கு செல்ல இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *