
புதுக்கோட்டை: இலுப்பூர் அருகேயுள்ள மாராயப்பட்டி கிராமத்தில், புதுக்கோட்டையை ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயர் எனும் மன்னர், சிவன் கோயிலுக்கு நிலத்தை கொடையாக வழங்கியதை குறிக்கும் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மாராயப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா, அங்குள்ள கண்டனி குளத்து வயல்வெளியில் ஊன்றப்பட்டுள்ள கற்பலகை ஒன்றில் எழுத்துகள் இருப்பதாக அளித்த தகவலின்பேரில், பேராசிரியர் முத்தழகன், பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, தான கல்வெட்டு இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.