• September 5, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: தவெக தலை​வர் விஜய் வரும் 13-ம் தேதி திருச்​சி​யில் தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்க உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் அவர் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உள்​ள​தாக​வும், ஓரிரு நாளில் தேர்​தல் பிரச்​சார சுற்​றுப்​பயணம் இறுதி செய்​யப்​பட்​டு, அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும் என்​றும் கட்சி நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் 8 மாதங்​கள் உள்ள நிலை​யில், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் தற்​போதே தீவிர பிரச்​சார சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் சட்​டப்​பேர​வைத் தொகுதி வாரி​யாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும், ‘மக்​கள் உரிமை மீட்பு நடை பயணம்’ என்ற பெயரில் பாமக தலை​வர் அன்​புமணி​யும், ‘உள்​ளம் தேடி இல்​லம் நாடி’ என்ற பெயரில் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா​வும் பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *