• September 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட், பஞ்​சாப் ஆகிய மாநிலங்​களில் இந்​தாண்டு இதற்கு முன் இல்​லாத அளவில் நிலச்​சரிவு​களும், வெள்​ள​மும் ஏற்​பட்​டது. வெள்​ளத்​தில் அதி​கள​வில் மரங்​கள் வந்​தன.

இதுகுறித்து அனாமிகா ரானா என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொது நல வழக்கு தொடர்ந்​தார். அதில், "அதி​கள​வில் ஏற்​பட்ட நிலச்​சரிவு காரண​மாக சாலைகள், நெடுஞ்​சாலைகள் பாதிப்​படைந்​தன. ஆறுகளில் அளவுக்கு அதி​க​மாக வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டது. இதற்​கான காரணத்தை அறிய புவி​யியல் மற்​றும் சுற்​றுச்​சூழல் நிபுணர் குழுவை அமைக்க வேண்​டும். பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு அவசர​கால நிவாரணம், மீட்பு நடவடிக்​கை, பாது​காப்பு மற்​றும் முதலுதவி ஆகிய​வற்றை உறுதி செய்ய மத்​திய, மாநில அரசுகளுக்கு உத்​தர​விட வேண்​டும்" என கூறப்​பட்​டிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *