
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்தாண்டு இதற்கு முன் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டது. வெள்ளத்தில் அதிகளவில் மரங்கள் வந்தன.
இதுகுறித்து அனாமிகா ரானா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், "அதிகளவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலைகள், நெடுஞ்சாலைகள் பாதிப்படைந்தன. ஆறுகளில் அளவுக்கு அதிகமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதற்கான காரணத்தை அறிய புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரணம், மீட்பு நடவடிக்கை, பாதுகாப்பு மற்றும் முதலுதவி ஆகியவற்றை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.