
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று அறிவிக்குமாறு தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரியும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி, சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.