
சென்னை: சென்னையில் மழைநீரை சேமிக்கும் வகையில் ரூ.159.08 கோடியில் 70 குளங்கள் புனரமைக்கப்பட்டு, 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் பருவமழையை முன்னிட்டு ஆறுகள், குளங்கள், கால்வாய்களை தூர்வாரி அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மழைநீர் வடிகால்வாய்களை அமைத்தல், மழைநீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.