
சென்னை: கோரிக்கைகளுக்காக அறவழியில் போராடிய அரசு மருத்துவர் சங்க தலைவரை பணியிட மாற்றம் செய்து பழிவாங்கக் கூடாது என்று, பாமக தலைவர் அன்புமணி, அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்டம் மேட்டூர் முதல் சென்னை கலைஞர் நினைவிடம் வரை அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர் நடைபயணம் மேற்கொண்டனர்.