
சென்னை: “இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் என்று நான் சொன்னதாக மக்களிடையே பரப்பிய அனைத்து ஊடகங்களுக்கும் நான் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “நான் சொல்லாத விஷயங்களை எல்லாம் நான் சொன்னதாக பத்திரிகையாளர்கள் போடுகிறார்கள். அது கண்டனத்துக்குரியது. அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்து விட்டது.