
புதுச்சேரி: பாஜகவை நம்பிய சிவசேனா, அதிமுக, பிஆர்எஸ் கட்சிகளின் நிலைதான் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கும் ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் நாராயணா தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் புதுச்சேரி மாநில மாநாடு நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த கட்சியின் தேசிய செயலர் நாராயணா செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:“பாஜகவை நம்பி எந்த மாநிலக் கட்சி சென்றாலும் அந்தக் கட்சியை ஒழிப்பதுதான் பாஜகவின் வேலை. மகாராஷ்டிரத்தில் சிவசேனையை ஓரங்கட்டி ஷிண்டே தலைமையிலான கட்சியை ஆதரித்து இப்போது அவரை முற்றிலும் பாஜக ஒழித்துவிட்டது. தமிழகத்தில் அதிமுகவை பிளவுபட வைத்துள்ளது. தெலுங்கானாவில் பாஜக மறைமுகமாக செயல்பட்டு வருவதால் சந்திரசேகர ராவ் தன்னுடைய மகள் கவிதாவை பிஆர்எஸ் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.