
மதுரை: தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் பெறப்படும் மனுக்களில் பெரும் பாலானவை வருவாய்த் துறை தொடர்புடையதாக உள்ள தாகவும், மேலும் தொடர் முகாம்களால் வழக்கமான பணிகளை மேற்கொள்ள இயலாமல் ஓய்வின்றி பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் கொண்டு வரப்பட்டது.