• September 4, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரையில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணி பதவி விலகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கடும் விமர்சனம் செய்து வருவதால், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மேயர் பதவி பறிக்கப்படும் என திமுகவினரும், எதிர்க் கட்சியினரும் எதிர்பார்த்தனர். ஆனால், புதிய மேயர் தேர்வில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோர் இடையே நீடிக்கும் கோஷ்டி பூசலால், தற்போது வரை மேயராக இந்திராணியே உள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *