
புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்றது. இதில் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாக்குகள் திருடப்படுவதாக கூறி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் கடைசி நாளான திங்கள்கிழமை ராகுல் காந்தி பேசும்போது, “வாக்கு திருட்டு தொடர்பாக விரைவில் ஹைட்ரஜன் குண்டு வீச உள்ளோம். அதன் பிறகு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியால் தனது முகத்தைக் காட்ட முடியாது” என்றார்.