
மதுரை: மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கில் மேயரின் கணவரின் ஜாமீன் மனு விசாரணை செப். 10-க்கு தள்ளிவைக்கப்பட்டது.
மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முகமதுநூர் உட்பட 7 பேருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் பொன் வசந்த், பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.